6 8
இலங்கைசெய்திகள்

மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய நோயாளி கைது

Share

குளியாப்பிட்டிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய நோயாளியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நோயாளி குளியாப்பிட்டிய மருத்துவமனையின் முதலாம் விடுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் அதற்கடுத்த இரண்டு நாட்களும் மருத்துவமனை ஊழியர்கள் இருவரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்கள் இரண்டு ​பேரும் தற்போதைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து குறித்த நோயாளியை விடுதியிலிருந்து இருந்து வெளியேற்றிய மருத்துவர்கள், அவரது அடாவடித்தனங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த நோயாளியை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...