5 14
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

Share

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

24 மணிநேரமும் கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதன் மூலம் கடவுச்சீட்டு வரிசையை படிப்படியாக இரண்டு மாதங்களில் குறைக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் நேற்று(07.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை மூன்று வேலை நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தினை செயற்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடவுச்சீட்டு பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை நிறுவுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...