5 14
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

Share

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

24 மணிநேரமும் கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதன் மூலம் கடவுச்சீட்டு வரிசையை படிப்படியாக இரண்டு மாதங்களில் குறைக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் நேற்று(07.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை மூன்று வேலை நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தினை செயற்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடவுச்சீட்டு பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை நிறுவுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...