4 40
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது குறித்த விசேட அறிவிப்பு

Share

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது குறித்த விசேட அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்குதல் வரையறுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் பாஸ் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடவுச்சீட்டு விநியோகம் வரையறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400 ஆக வரையறுக்கப்பட உள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் தற்பொழுது கையிருப்பில் 40000 கடவுச்சீட்டு பாஸ் புத்தகங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக கடவுச்சீட்டு புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதியின் பின்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ள காரணத்தினால் தற்பொழுது கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக ஒரு நாள் சேவையில் 1200 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் நிலையில் தற்பொழுது அவ்வாறு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

இதனால் வழமையான நடைமுறைகளில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...