24 6639bea2af649
இலங்கைசெய்திகள்

வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வேலைவாய்ப்பு மோசடி

Share

வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வேலைவாய்ப்பு மோசடி

கொழும்பு(Colombo) – மகரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து 180 கடவுச்சீட்டுக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடவுச்சீட்டுக்களை மகரகமயில் (Maharagama) உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை தேடுபவர்களிடமிருந்து 260 மில்லியன் ரூபா பணத்தினை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, நிறுவன உரிமையாளர் பணத்தை மோசடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...