7 7
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பேருந்து சாரதியின் மோசமான செயலால் பரிதாபமாக உயிரிழந்த நபர்

Share

கெஸ்பேவ – கொழும்பு வீதியில் தனியார் பேருந்தின் ஓட்டுநர், போதையில் பேருந்தை ஓட்டிச் சென்றமையினால் பேருந்தில் ஏற முயற்சித்தவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

திவுல்பிட்டிய சந்தியில் பிலியந்தலை நோக்கிச் செல்லும் பேருந்தில் பயணி ஏற முயன்ற போது பேருந்து திடீரென இயங்கியதால் பயணி கீழே விழுந்துள்ளார்.

இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் பொரலஸ்கமுவ, திவுல்பிட்டியவை சேர்ந்த 75 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை நகரத்திற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நபர் கொழும்பிலிருந்து கெஸ்பேவ செல்லும் பேருந்தில் முன் கதவு வழியாக ஏறுவதற்கு முன்பு ஓட்டுநர் பேருந்தை சாரதி ஓட்டியுள்ளார்.

இதனால் கீழே விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது நிலை மோசமாக இருந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் அவர் அங்கு உயிரிழந்துள்ளார். பேருந்து ஓட்டுநர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அந்த நேரத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு-கெஸ்பேவ தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பலர் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டு கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் தங்கள் உயிர்களையும் கைகால்களையும் இழந்துள்ளனர்.

மேலும் பல சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...