18 22
இலங்கைசெய்திகள்

கட்சியின் தீர்மானங்கள் குறித்து திருப்தியில்லை – ரோஹினி

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் சில தீர்மானங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனங்கள் தொடர்பில் முன்னதாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் நேற்று மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் கூடுதல் அளவு வாக்குகள் பெறுவோருக்கு ஆசனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் தற்பொழுது அந்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் தீர்மானத்தினால் கட்சியின் பல அமைப்பாளர்களுக்கு கட்சி உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என ரோஹினி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சில தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...