5 24
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

Share

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

22ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிச்சயமற்ற நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தற்போதைய அரசியல் வேறும் திசை நோக்கி பயணிக்கக் கூடிய சாத்தியம் உண்டு என காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 22ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த நிச்சயமற்ற நிலையை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தலை அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி...

image 28f29109e8
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட...

15786408 national 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிவேரிய விடுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஐஸ் போதைப் பொருள் கொடுத்து 21 வயதுப் பெண்ணுக்குத் துன்புறுத்தல்!

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருள் (Ice...