14 21
இலங்கை

ரணில் வென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது : திலீபன் எம்.பி பகிரங்கம்

Share

ரணில் வென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது : திலீபன் எம்.பி பகிரங்கம்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் (Kulasingam Thileepan) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறும் பட்சத்தில் ஒன்றரை வருடங்களுக்கு நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (21) வவுனியா (Vavuniya) அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் அதிக அளவில் வாக்கு அளிப்பதில் ஆர்வம் கொண்டு செயல்படுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

15 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லதண்ணி – நுவரெலியா பிரதான வீதியில் மகிழுந்து விபத்து: மூவர் காயம்!

நல்லதண்ணி பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 15...

12 12
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மோதல்கள் மற்றும் அவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைக்...

11 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகம்: ஐந்து மாதங்களில் மீள்நிர்மாணப் பணிகள் நிறைவு!

டித்வா (Ditwah) புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலத்த சேதமடைந்த கண்டி நீதிமன்ற...