images 7 5
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்திற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு: டிசம்பர் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது!

Share

பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டின் தற்போதைய அவசர அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாளையும் (18) நாளை மறுதினமும் (19) நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு டிசம்பர் 18ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படும்.

நாளை (18) பிற்பகல், அனர்த்தத்தின் பின்னரான நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அன்றைய தினம் 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் இந்த நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...