12 3
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

Share

மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மே மாதத்தின் முதலாம் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம், 09ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதன் போது 08ம் திகதி வாய்மூல வினாக்களுக்கான விடையளித்தல் தவிர அன்றைய தினம் மாலை அமர்வில் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் வரிவிதித்தல் தொடர்பில் அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்படும்.

09ம் திகதி காலை அமர்வில் முதலில் வாய்மூல வினாக்களுக்கு விடையளிக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அரச தலைவர்கள், அவர்களின் பாரியார்கள் அனுபவிக்கும் சலுகைகளை குறைத்தல் தொடர்பான பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியில் அரசாங்கத்தின் வகிபாகத்தை அதிகரித்தல் தொடர்பான பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரியின் கணக்காய்வாளர் நாயகம் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான பிரேரணை என்பன விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கவுள்ள இலங்கையில் சகல குடும்பங்களுக்கும் சொந்த வீடு வழங்கல், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைக்கும் பொதுப் போக்குவரத்துக்கு தரங்களுக்கு அமைவான பேருந்துகளை மட்டும் இறக்குமதி செய்வதற்கான பிரேரணை என்பனவும் அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...