19 22
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பணியாளர்களின் உணவுக்கட்டணம் மூன்று மடங்காக அதிகரிப்பு

Share

நாடாளுமன்ற பணியாளர்களின் உணவுக் கட்டணம் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு மாதாந்த உணவுக் கட்டணமாக இதுவரை காலமும் 1000 ரூபா மட்டுமே அறவிடப்பட்டு வந்தது.

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய குறித்த கட்டணம் தற்போதைக்கு மூவாயிரத்து 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கான உணவுக் கட்டணமும் ஆயிரத்து 500 ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுக்கான பல்வேறு சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் உணவுக் கட்டணத்தையும் அதிகரித்திருப்பது குறித்து பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...