19 22
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பணியாளர்களின் உணவுக்கட்டணம் மூன்று மடங்காக அதிகரிப்பு

Share

நாடாளுமன்ற பணியாளர்களின் உணவுக் கட்டணம் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு மாதாந்த உணவுக் கட்டணமாக இதுவரை காலமும் 1000 ரூபா மட்டுமே அறவிடப்பட்டு வந்தது.

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய குறித்த கட்டணம் தற்போதைக்கு மூவாயிரத்து 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கான உணவுக் கட்டணமும் ஆயிரத்து 500 ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுக்கான பல்வேறு சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் உணவுக் கட்டணத்தையும் அதிகரித்திருப்பது குறித்து பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...