rtjy 194 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் இருந்து இலங்கை பெண்ணுக்கு வந்த பொதியால் அதிர்ச்சி

Share

அமெரிக்காவில் இருந்து இலங்கை பெண்ணுக்கு வந்த பொதியால் அதிர்ச்சி

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து விமானப் பொதிகள் மற்றும் தபால்கள் மூலம் கொழும்பு ட்ரைகோ சரக்குகளை அகற்றும் முகவர் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், சுங்க கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று அவை கைப்பற்றப்பட்டுள்ளன. கொக்கெய்ன் மற்றும் மரிஜுவானா ஆகியவை நுட்பமான முறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு 6 கோடியே 69 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பொதி கம்பஹா பகுதியில் உள்ள பெண் ஒருவரின் குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதென சுங்க ஊடகப் பேச்சாளர் சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ட்ரைகோ நிறுவனத்தில் சந்தேகத்திற்கிடமான பார்சல் இன்று திறக்கப்பட்டதுடன், உணவு கேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ 161 கிராம் மரிஜுவானா மற்றும் 511 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த பெண்ணின் எழுத்துமூல அனுமதியுடன் டிரைகோ நிறுவனத்திற்கு இந்த பெற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் இந்த நிறுவனத்தில் கடமையாற்றும் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...