24 661ec2fc97dfb
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்தின் முக்கிய சகாக்களுக்கு அரசாங்கத்தில் இணைய அழைப்பு

Share

சஜித்தின் முக்கிய சகாக்களுக்கு அரசாங்கத்தில் இணைய அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின்(SJP)நான்கு முக்கிய உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான தலதா அதுகோரல(Thalatha Atukorale), கபீர் ஹாசீம்(Kabir Hashim), முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) மற்றும் ஏரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மேலும், குறித்த நான்கு பேருக்கும் நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றவில்லை எனவும் நாலக கொடஹேவாவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...