1 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

Share

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக இல்லாமல் ஜனாதிபதியாகவே எரிபொருள் விலை திருத்தத்தை அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) செய்ததாக இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரொலியம் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் இன்று (1) பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் டி. ஜே. ராஜகருணா அதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விலையை குறைக்கும் தீர்மானம் நாட்டை மையப்படுத்தியே ஜனாதிபதியால் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கான எரிபொருளை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை முன்பதிவு (oder) செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் விலை குறைக்கப்பட்ட எரிபொருள் கடந்த மாத அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் படி, பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....