24 66264dea61717
இலங்கைசெய்திகள்

வரி ஏய்ப்புச் செய்த வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

Share

வரி ஏய்ப்புச் செய்த வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

வரி ஏய்ப்புச் செய்து மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ, கைமாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று(22.04.2024) குறித்த தடையை விதித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையொன்றின் பிரகாரம் இலங்கையில் 112 வாகனங்கள் வரி ஏய்ப்புச் செய்து மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வாகனங்கள் உரிய முறையில் சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் போலியான ஆவணங்கள் மூலம் விடுவிக்கப்பட்டு, பெறுமதி குறைந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை முடிவில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் குறித்த வாகனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை அவற்றை வேறு நபர்களுக்குக் கைமாற்றவோ, விற்பனை செய்யவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...