இலங்கைசெய்திகள்

இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்

Share
இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்
இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்
Share

இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்

நாட்டில் தொடர்ந்தும் இனவாதம் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்தும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் தொடர்ந்தும் இனவாத, மதவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்களின் இவ்வாறான கருத்துக்களால் நாடு அவமானத்தைச் சந்திக்கின்றது.

இந்த விடயத்தில் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் நழுவல் போக்கில் செயற்படக்கூடாது.

வெறும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் தெரிவிக்காமல் ரணில் அரசு செயலில் இறங்க வேண்டும்.

தொடர்ந்தும் இனவாதம் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...