24 6606250a7efde
இலங்கைசெய்திகள்

இலங்கையில் Onmax DT நிறுவன மோசடியில் சிக்கிய பலர் உயிர் மாய்ப்பு

Share

இலங்கையில் Onmax DT நிறுவன மோசடியில் சிக்கிய பலர் உயிர் மாய்ப்பு

இலங்கையில் Onmax DT நிறுவனத்தின் மோசடியில் சிக்கிய பலர் உயிரை மாய்த்துள்ளதாக வைப்பாளர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பணத்தை இழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மக்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து கிடைத்த பணத்தில் இதற்காக முதலீடு செய்துள்ளனர்.

அந்த நிறுவனம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து 3500 கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு செய்துள்ளது.

Onmax DT நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்ட பணத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மிகச் சிறிய பகுதியையே கண்டுபிடித்துள்ளது.

பெருமளவிலான சொத்துக்கள் தொடர்பான தகவல்களை விசாரணை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை எனவும் வைப்பாளர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...