6 12
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Share

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட 1690 ஆயுதங்களில் 30 ஆயுதங்கள் மட்டுமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வருடங்களில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களால் பெறப்பட்ட துப்பாக்கிகளில் 30 துப்பாக்கிகள் மட்டுமே நேற்று வரையில் வெலிசர கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள தானியங்கி துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த உத்தரவின் பிரகாரம், இந்த ஆயுதங்கள் கையளிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தானியங்கி துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...