tamilni 345 scaled
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களுக்கு பாரிய அச்சுறுத்தல்

Share

அரச நிறுவனங்களுக்கு பாரிய அச்சுறுத்தல்

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டால், அது அரச நிறுவனங்களுக்கே பெரும் பாதிப்பாக அமையும் என தொழில்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும், அரசாங்கம் இன்று (23.01.2024) சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் நாளை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாளை முதல் சமூக ஊடக நிறுவனங்கள் இலங்கை அரச நிறுவனங்களுடனான அனைத்து தகவல் தொடர்பு மற்றும் கூட்டுத் தொடர்புகளையும் துண்டிக்க வாய்ப்புள்ளது.

இதன் விளைவாக, மெட்டா (பேஸ்புக்), யூடியூப், கூகுள், எக்ஸ் மற்றும் ஆசிய இணைய கூட்டணியின் பிற அங்கத்துவ வலையமைப்புகள் அரசு நிறுவனங்களுடனான அவர்களின் தற்போதைய சிறப்பு தொடர்பு மற்றும் கூட்டு சேனல்களை இடைநிறுத்தும் அபாயம் ஏற்படும்.

மேலும், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமான ஆசிய இணைய கூட்டணி (AIC), பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதுடன் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளும் இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 8 ஆம் திகதி, AIC சட்ட மூலத்தை நிராகரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் சட்டமூலத்தின் அசல் வடிவம் நாடாளுமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் ஒத்துழைக்க முடியாது என்றும் வலியுறுத்தியிருந்தது.

எனவே, நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், தொழில்நுட்ப நிறுவனங்கள், பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவு, கணினி குற்றங்கள் தொடர்பான அவசர நடவடிக்கை மையம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடனான தொடர்பை நிறுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது கணினி மற்றும் சமூக ஊடக குற்ற வழக்குகளில் நடந்து வரும் பொலிஸ் விசாரணைகளை கூட பாதிக்கலாம் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...

vegetable
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக காய்கறி விலைகள் அதிகரிக்கும் அபாயம்: மனிங் சந்தை வர்த்தகர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகக் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என்று மனிங் சந்தை...