tamilnih 41 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் இணையவழி கடன் மன உளைச்சலால் உயிரிழப்புகள்

Share

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்களால் சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இந்நிறுவனங்களால் நாட்டில் பல பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய கடன் மாபியாவுக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற அமைப்பின் குழுவினரை நேற்று (07.01.2023) சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நிகழ்நிலை கடன் நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் 365 சதவீதத்துக்கும் மேல் வட்டி வசூலிப்பதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அங்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத இந்த நிதி பரிவர்த்தனைகளால் சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்களால் இந்த நாட்டில் பல பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு தொலைபேசியில் அழைப்பு மூலம் குறித்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...