24 13
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த ஒரு தொகை சிகரெட்டுடன் அவர் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 3.18 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபுதாபியில் இருந்து EY390 விமானத்தில் வந்த பன்னிபிட்டியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் சட்டவிரோதமாக 108 மான்செஸ்டர் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.

இதன் சந்தை மதிப்பு 2.2 மில்லியன் ரூபாய் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....