tamilni 175 scaled
இலங்கைசெய்திகள்

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Share

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

புத்தளம் – ஆனமடுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது ஆனமடுவை பிரதேசத்தில் உள்ள நத்தேவ பகுதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையில் தனிப்பட்ட பிணக்கு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உடனடியாக ஆனமடுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...