6 51
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Share

மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதிகளுக்காக ஒரு பில்லியன் டொலரை ஒதுக்குமாறு மத்திய வங்கி, நிதி அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து இந்த தொகையை ஒதுக்குமாறு அறிவித்துள்ளது.

இதன்படி அரசாங்க வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் வாகனங்களுக்கான வரியை நிதி அமைச்சும், அமைச்சரவையும் தீர்மானிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி வருமானம் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வாகனங்கள் மற்றும் தங்கம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது நாட்டில் இருப்பதால், அவற்றின் பராமரிப்புக்கும் அதிக செலவாகும் என்பதால் புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு இன்னும் நல்ல அளவில் இல்லை என்றும், ஆனால் வெளிநாட்டு கையிருப்பு அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் இலக்கை பாதிக்காத வகையில், வாகனங்களை இறக்குமதி செய்ய எவ்வளவு தொகையை ஒதுக்கலாம் என மத்திய வங்கி ஆய்வு செய்து, அதன்படி, ஒரு பில்லின் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்ய முடிடியும் என்ற பரிந்துரையை நிதியமைச்சிற்கு வழங்கியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதன் மூலம் வாகன இறக்குமதிக்கான அந்நிய செலாவணி ஒதக்கத்தை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒரு பில்லியன் ஒதுக்கமானது அந்நிய செலாவணி கையிருப்பினை பேணுவதற்கும் அதிகரிப்பதற்கும் தடையாக அமையாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...