25 683b020c52482
இலங்கைசெய்திகள்

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு: தொற்றால் குழந்தை மரணம்

Share

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரோன் வைரஸ் துணை திரிபுகளான LF.7 மற்றும் XFG ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜூட் ஜெயமஹா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த கோவிட் மாறுபாடு குறித்து தேவையற்ற அச்சம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளிகள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் முகக் கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் வைரஸின் புதிய வகைகள் அவ்வப்போது பரவுகின்றன, மேலும் இது தொடர்பாக சுகாதாரத் துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலி தேசிய மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.​​

குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் இது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.

எனினும் ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...