rtjy 10 scaled
இலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் இவ்வருடம் அதிகரிப்பு

Share

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் இவ்வருடம் அதிகரிப்பு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் சாதகமான வளர்ச்சி காணப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (01.11.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 473,014 ஆகும். இவர்களில் 394,878 பாடசாலை ஊடாக விண்ணப்பித்தவர்கள், மற்றும் 78,136 தனியார் விண்ணப்பதாரர்கள்.

மொத்த விண்ணப்பதாரர்களில் 428,299 பேர் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், சித்தியடைந்தோர் தொடர்பிலான 90.54% வீதமானது மிகவும் சாதகமான நிலைமையாகும்.

இந்த வருட பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன் முதலிடத்தை தென் மாகாணம் பெற்றுள்ளது.

இது 77.57% வீதமாக வீதமாக காணப்படுகிறது. இரண்டாவது இடத்தில் 75.10% வீத சித்தி நிலையுடன் சப்ரகமுவ மாகாணமும், மூன்றாவது இடத்தினை 74.92% வீதத்துடன் மேல் மாகாணமும், நான்காவது இடத்தினை 74.50% வீதத்துடன் வடமேற்கு மாகாணமும் பெற்றுள்ளன.

மேலும், உயர்தர வகுப்பில் கல்வியை தொடர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

2014 இல் 69.02% ஆகவும், 2015 இல் 69.33% ஆகவும், 2016 இல் 69.4% ஆகவும், 2017 இல் 73.05% ஆகவும், 2018 இல் 75.09% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 76.59% ஆகவும், 2015 இல் 76.59% ஆகவும், 74.59% ஆகவும் உள்ளது.

இந்நிலையில், மிகவும் துல்லியமான பெறுபேறுகளை வழங்குவதற்கு கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இரவும் பகலும் கடுமையாக உழைத்துள்ளனர்.

மேலும், பெறுபேறுகள் வெளியாகும் வரை பரீட்சைக்கு வெற்றிகரமாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.” என்றார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...