இலங்கைசெய்திகள்

பரீட்சை வினாத்தாள்கள் கசிவு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

2
Share

வடமத்திய மாகாணத்தில் தரம் 11 இற்கான தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பதில் அதிபரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் அவர் இன்று(04) பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பதில் அதிபர் 52 வயதுடைய அனுராதபுரம் தம்மென்ன குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, வினாத்தாள்கள் கசிந்த சம்பவத்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு ஒன்றரை மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் பரவுவது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 28ஆம் திகதி குறித்த உப அதிபர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...