1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

Share

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர் எண்ணெய்க் கசிவு, இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் துரித நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்காக கொழும்பு துறைமுகத்துக்கு அப்பாலான கடற்பகுதியில், கப்பலொன்றிலிருந்து மசகு எண்ணெய்யை இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கசிவு ஏற்பட்டு, எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

இது தொடர்பில் துறைமுக அதிகாரசபையிடமிருந்து அவசர அறிவித்தல் கிடைத்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது 3 அதிவேகத் தாக்குதல் படகுகளையும் கடலோரக் காவல் படையில் இணைந்த பாதுகாப்புப் படகுடன் இணைந்து கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பியது.

இந்தக் கட்டுப்பாட்டு முயற்சியின்போது, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஆதரவும் பெறப்பட்டது.

ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் பயனாக, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்த எண்ணெய்க் கசிவுப் பரவலானது திறம்படத் தடுத்து நிறுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...