1 4
இலங்கைசெய்திகள்

பிரசன்ன, செவ்வந்தியைக் கண்டுபிடிக்க மாறுவேடங்களில் சுற்றித் திரியும் பொலிஸார்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக நாடு முழுவதும் 10 சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என்று குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவர மண்டிய, கிரிபத்கொட, கிரில்லவல, நீர்கொழும்பு, கம்பஹா, களனி, வத்தளை உள்ளிட்ட 10 பகுதிகள் இவ்வாறு சுற்றிவளைத்து சோதனையிடப்பட்டுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரசன்ன ரணவீரவை தேடுவதற்காக பல்வேறு மாறுவேடங்களில் பல புலனாய்வுக் குழுக்கள் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20 இடங்களில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், அவர் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் கைது செய்யப்படவில்லை. பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் இஷாரா செவ்வந்தி காணாமல் போயுள்ளார், மேலும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...