8 6 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் கைது

Share

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் கைது

கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிற்றூந்து மற்றும் இரு உந்துருளிகளில் பயணித்த சந்தேகநபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் 2 கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஹீனடியன மகேஸ் என்ற பாதாள உலக நபரின் அறிவுறுத்தலின் பேரில், மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக தாம் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

ஹீனடியனா மகேஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி வர்த்தகர்களை இலக்கு வைத்து கப்பம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த வர்த்தகரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...