rtjy 172 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா கவலை

Share

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா கவலை

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய பாதுகாப்புச் சட்டம் ஆகிய உத்தேச சட்ட வரைவுகள் குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிதமிஞ்சிய அதிகாரத்தை வழங்கும் வகையிலானது எனவும், மனித உரிமைகளை வரையறுக்கும் வகையிலானது எனவும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரவீனா ஷம்தாசானி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் அமைதியாக ஒன்று கூடுதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறுகள் ஏற்படக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பயங்கரவாதம் என்ற பதம் விரிவாக வரைவிலக்கணப்படுத்தபட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்பினரையும் நிறுத்தி விசாரணை நடத்தி கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய பாதுகாப்புச் சட்ட வரைவின் உள்ளடக்கமானது கருத்துச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலானது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...