24 661734dd29131
இலங்கைசெய்திகள்

வேலையை இழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கான விமானப்படை வீரர்கள்

Share

வேலையை இழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கான விமானப்படை வீரர்கள்

விமானப்படையில் சேவையாற்றும் 35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ (Udeni Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறைக்கப்பட்ட விமானப்படையினரின் எண்ணிக்கைக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த நம்புவதாகவும் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

அக்குரகொட விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமானப்படைத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த விமானப்படை தளபதி,

நாங்கள் ஏற்கனவே விமானப்படையைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சிறப்பு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோம்.

தொழில்நுட்பம் அவ்வப்போது மாறுவதால், விலையும் குறைகிறது. சிசிடிவி நமக்கு புதிதல்ல. அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், விமானப்படையை ஓரளவு குறைக்கும் திறன் நம்மிடம் உள்ளது.

உதாரணமாக, கிலோமீட்டருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு அதிக எண்ணிக்கையிலான படையினரை நிறுத்த வேண்டும். ஆனால் உயர்தொழில்நுட்ப கமெரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...