இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

Share
15 14
Share

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை கிடையாது என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் சட்டம் எனவும் அதற்கு புறம்பாக செயற்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தற்பொழுது பாரிய மக்கள் கட்சியாக உருப்பெற்றுள்ளது எனவும் கடந்த காலங்களில் சின்னத்திற்காக மட்டும் வாக்கு கேட்டதாகவும் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...