15 14
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

Share

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை கிடையாது என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் சட்டம் எனவும் அதற்கு புறம்பாக செயற்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தற்பொழுது பாரிய மக்கள் கட்சியாக உருப்பெற்றுள்ளது எனவும் கடந்த காலங்களில் சின்னத்திற்காக மட்டும் வாக்கு கேட்டதாகவும் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...