24 67012d3b585d5
இலங்கைசெய்திகள்

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி

Share

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுப் பட்டியலை மாவட்ட மட்டத்தில் இறுதி செய்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையை தேசிய மக்கள் சக்தி தயாரித்து வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எந்த வகையிலும் தலையிடாது எனவும், விருப்பு வாக்குகள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை, தமது கட்சி உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கட்சிகளைப் போல் அல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் நியமனப் பட்டியல்கள் மாவட்ட மட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அபேசிங்க, இறுதி செய்யப்பட்ட பட்டியல்கள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி, தனது நியமனப் பட்டியல்களிலும் தேசியப் பட்டியலிலும் அதிகமான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கும், அதேவேளை இரண்டு பட்டியல்களிலும் அதிக தொழில் வல்லுனர்களும் அடங்குவர்.

மேலும், கட்சிக்குள் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...