24 67012d3b585d5
இலங்கைசெய்திகள்

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி

Share

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுப் பட்டியலை மாவட்ட மட்டத்தில் இறுதி செய்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையை தேசிய மக்கள் சக்தி தயாரித்து வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எந்த வகையிலும் தலையிடாது எனவும், விருப்பு வாக்குகள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை, தமது கட்சி உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கட்சிகளைப் போல் அல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் நியமனப் பட்டியல்கள் மாவட்ட மட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அபேசிங்க, இறுதி செய்யப்பட்ட பட்டியல்கள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி, தனது நியமனப் பட்டியல்களிலும் தேசியப் பட்டியலிலும் அதிகமான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கும், அதேவேளை இரண்டு பட்டியல்களிலும் அதிக தொழில் வல்லுனர்களும் அடங்குவர்.

மேலும், கட்சிக்குள் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
f0e9cb2a9609e8e8b47dcbf4f046f1565241cfcf252679380eda49246f121e33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 41 பேர் பலி; சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல்! விஜய் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் (செப்...

images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து...

Weligama Incident 1200x675px 23 10 25
இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று...

images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால்...