இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய கல்வித் தகைமை விவகாரம் – பதிலடி கொடுத்த சபாநாயகர்

11 6
Share

சர்ச்சைக்குரிய கல்வித் தகைமை விவகாரம் – பதிலடி கொடுத்த சபாநாயகர்

தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் அசோக ரன்வல (Ashoka Ranwala) தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வல பட்டப்படிப்பை முடித்திருந்தால் நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) மற்றும் சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி சவால் விடுத்திருந்தனர்.

சபாநாயகரின் பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அசோக ரன்வல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் ஜப்பானில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

தமக்கும் கட்சிக்கும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு தற்பொழுது பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் நேற்று சவால் விடுத்திருந்தார்.

அத்துடன் அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்றும் சபாநாயகர் குறித்த விடயத்திற்கு பதிலளிக்கத் தவறினால் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....