1 1 4
இலங்கைசெய்திகள்

அநுர கட்சியில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள்…சஜித் தரப்பு பகிரங்கம்

Share

அநுர கட்சியில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள்…சஜித் தரப்பு பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியிலில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பல் மேலும் தெரியவருவதாவது, “அரிசி கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடத் தவறிய ஆலை உரிமையாளர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்தோடு, ரத்ன அரிசி ஆலைக்கு சொந்தக்காரரான குறித்த நபர் இலங்கை வங்கியொன்றில் 3.5 பில்லியன் ரூபா கடனாக பெற்றுள்ளதாகவும் அமைச்சர் வசந்த குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் வசந்தவின் கருத்துக்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலிலும் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்களே உள்ளனர் என தெரிவித்தார்.”

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...