3 6
இலங்கைசெய்திகள்

அநுரவை நெருக்கடிக்குள் தள்ளும் அரசியல்வாதிகள்! அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

Share

திருடர்களை பிடிக்கப் போவதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை 100 லட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக குற்றவியல் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முறைப்பாடு செய்ய போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

திருட்டு எப்போதும் இல்லாத அளவுக்கு நடக்கிறது. மோசடி மற்றும் ஊழல் நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் அமைச்சர் ஒருவர் ​​600 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை 100 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துள்ளார்.

மோசடி சொத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்தை மீண்டும் கையகப்படுத்த முடியும். அந்த சட்டத்திற்கு அமைய முதலாவது முறைப்பாடு அமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ளது.

வர்த்தக அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் இதற்கு பணம் செலுத்தியதாக தகவல் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 லட்சம் ரூபாயில் வீட்டை மாற்றும் பத்திரத்தில் தேசிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே கையெழுத்திட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

திருட்டையும் மோசடியையும் ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்தார்கள், ஆனால் இன்று அவர்கள் இரட்டை வண்டிகளில் சென்று திருடுகிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...