2 48
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரகடனம் குறித்து ரணில் விமர்சனம்

Share

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரகடனம் குறித்து ரணில் விமர்சனம்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமர்சனம் செய்துள்ளார்.

மாவனல்ல பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் நாட்டின் வருமானம் 200 பில்லியன்களினால் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசாங்கம் இழக்கும் வருமானத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், அரசாங்க வருமானத்தை குறைத்து எவ்வாறு செலவுகளை மேற்கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கணிதம் இந்த பொருளாதாரம் தெரியாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் பொருளாதாரம் கடந்து வரும் தொங்கு பாலத்தின் இரண்டு முனைகளையும் வெட்டி விடவே முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாம் தொங்கு பாலத்தை கைவிடாமல் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தை தாம் முழுமையாக வாசித்ததாகவும், அதனை நாட்டு மக்கள் தேர்தலுக்கு முன்னர் வாசிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...