2 48
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரகடனம் குறித்து ரணில் விமர்சனம்

Share

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரகடனம் குறித்து ரணில் விமர்சனம்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமர்சனம் செய்துள்ளார்.

மாவனல்ல பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் நாட்டின் வருமானம் 200 பில்லியன்களினால் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசாங்கம் இழக்கும் வருமானத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், அரசாங்க வருமானத்தை குறைத்து எவ்வாறு செலவுகளை மேற்கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கணிதம் இந்த பொருளாதாரம் தெரியாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் பொருளாதாரம் கடந்து வரும் தொங்கு பாலத்தின் இரண்டு முனைகளையும் வெட்டி விடவே முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாம் தொங்கு பாலத்தை கைவிடாமல் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தை தாம் முழுமையாக வாசித்ததாகவும், அதனை நாட்டு மக்கள் தேர்தலுக்கு முன்னர் வாசிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...