6 22 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இந்த வருட இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பை பாதிக்காத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கையிருப்புகளை பாதிக்கும் வகையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் திட்டத்தின் படி நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...