rtjy 267 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

Share

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மிகவும் வறண்ட காலநிலையால், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாவது, 2023.08.24ஆம் திகதியின் நிலவரப்படி, நீர் வழங்கல் அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய நீரின் அளவு குறைவடைந்ததால், 11 மாவட்டங்களில் உள்ள 43 நீர் விநியோக அமைப்புகளில் 131,132 நீர் இணைப்புகளுக்கு கொள்கலன்கள் (பவுசர்) மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர் வழங்கும் நீர் ஆதாரங்களின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.

கண்டி – ஹந்தான பிரதேசத்திற்கு நேர அட்டவணை முறையின் ஊடாக 100 வீத நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நாட்களில் நீர் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருவதால், நீர் வழங்கல் அமைப்புகளில் உள்ள பிரதான நீர் தொட்டிகளில் நீரின் அளவு விரைவாக முடிவடைகிறது.

மேலும், கடுமையான வெப்பநிலை காரணமாக, சிலர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கிறார்கள்.

பல நீர் ஆதாரங்கள் வறண்டு கிடக்கும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், வாகனங்களைக் கழுவுதல், குழாய்கள் மூலம் பூக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்றவற்றைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்றும் பிரதி பொது முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...