24 6622bc3668571
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாணத்தில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கு ஆளுநர் அறிவிப்பு

Share

வடக்கு மாகாணத்தில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கு ஆளுநர் அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18.04.2024) விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு திணைக்களத்திலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

அத்துடன் பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தே

Share
தொடர்புடையது
24 6694ccce98702
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!

சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா...

1762390683 Sri Lanka Pallekele Kandy fire 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி பல்லேகலை தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: 3 தீயணைப்பு வாகனங்கள் விரைவு!

கண்டி – பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இன்று (நவம்பர் 06)...

24 6705d4ceb2b32
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் ஆயுதங்களை தேடி அகழ்வு முயற்சி: 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் (நவ4) அகழ்வு...

25 690b61f42a8cd
செய்திகள்இலங்கை

அபாயம்! இலங்கையில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களும் செயலிழப்பு – 3 ஆண்டுகளாக சமிக்ஞை இல்லை!

இலங்கையில் உள்ள 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் தற்போது செயல்படவில்லை என்பதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...