image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

Share

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின் உரிமத்தை இரத்து செய்யக் கோரி, அப்பகுதித் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (03) பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று காலை 9.00 மணியளவில் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் திரண்ட மக்கள் குறித்த மதுபானக் கடைக்கு வழங்கப்பட்ட உரிமம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. அதனை அதிகாரிகள் மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும், புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடையும் மாணவர்கள் கூட, இந்தப் பழக்கத்தால் சாதாரண தரத் தேர்வில் தோல்வியடையும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுபானக் கடைக்கு மிக அருகிலேயே கோயில், பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளதால், மத விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மதுக்கடை காரணமாகக் கிராமத்தின் அமைதி சீர்குலைந்துள்ளதோடு, கடந்த காலங்களில் இதனால் உயிரிழப்புகள் கூட நேர்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

“குறிப்பிட்ட சிலர் புத்தகங்களை விற்று மது வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது எமது கிராமத்தின் எதிர்காலத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது.” – போராட்டக்காரர்கள்.

இந்தப் போராட்டத்திற்கு நோர்வுட் பிரதேச சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு, காலாவதியான மதுபானக் கடை உரிமத்தை நிரந்தரமாக இரத்து செய்து, கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் எனத் தோட்டத் தொழிலாளர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...