12 8
இலங்கைசெய்திகள்

வடக்கில் தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் குறித்து ரவிகரன் வலியுறுத்து!

Share

வடக்கில் தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் குறித்து ரவிகரன் வலியுறுத்து!

முல்லைத்தீவிலுள்ள(Mullaitivu) தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் ஆகிய கிராமங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.

தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இராணுவகெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 40வருடங்களாகியுள்ளபோதிலும் இதுவரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குருந்தூர் மலை வழிபாடுகளைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தின் இடையூறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குருந்தூர்க்குளத்தின் அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் நாடளுமன்ற உறுப்பினர் அவதானம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...