12 8
இலங்கைசெய்திகள்

வடக்கில் தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் குறித்து ரவிகரன் வலியுறுத்து!

Share

வடக்கில் தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் குறித்து ரவிகரன் வலியுறுத்து!

முல்லைத்தீவிலுள்ள(Mullaitivu) தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் ஆகிய கிராமங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.

தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இராணுவகெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 40வருடங்களாகியுள்ளபோதிலும் இதுவரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குருந்தூர் மலை வழிபாடுகளைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தின் இடையூறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குருந்தூர்க்குளத்தின் அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் நாடளுமன்ற உறுப்பினர் அவதானம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...

1762822905 Sri Lanka Pakistan SLC PCB ICC Ada Derana 6
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ராவல் பின்டியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் பவன் ரத்னாயக்க, கமில் மிஷார, லஹிரு உதார ஆகியோரில் ஒருவருக்கு...

image 7d9f309897
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் தலாவவில் பஸ் விபத்து: உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்படப் பலர் காயம் – ஒருவர் பலி!

அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே...