rtjy 360 scaled
இலங்கைசெய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்

Share

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் வவுனியாவில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் கைகலப்பு தொடர்பாக குறித்த சங்கம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமானது எட்டு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தை ஸ்தாபித்து அவர்களை நிர்வாகித்து வரும் ஒரு தாய் அமைப்பாகும். வவுனியா மாவட்டத்தின் நிர்வாகமானது திருமதி சறோஜினி என்பவர் தலைமையில் இயங்கி வருகின்றது.

வவுனியா மாவட்டத்தின் செயலாளராகவும் எட்டு மாவட்ட நிர்வாகத்தின் பொருளாளராகவும் இருந்த திருமதி ஜெனிதா அவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் நடந்த சில சம்பவங்களிற்காக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு 6 மாதங்களிற்கு பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் விலகி சாதாரண உறுப்பினராக இருக்கும் படி எமது சங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டார்.

அவரிடம் உள்ள சகல ஆவணங்கள், வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு அனைத்தையும் மீள ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தார்.தொடர்ந்து பதிவுத்தபாலில் எழுத்து மூலமாகவும் அவர் மேற்படி தீர்மானத்தின்படி செய்யும் படி அறிவுறுத்தப்பட்டார்.

ஆனால் அவர் இன்று வரை சங்கத்தின் ஆவணங்களையோ, வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு என்பவற்றை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இவ்வாறாக ஒழுக்காற்று நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் நிர்வாக ஒழுங்கிற்கு உட்படாமல் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் தலைவி திருமதி சறோஜினி அணுகிய, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் ( திருமதி ஜெனிதாவின் நடவடிக்கைகளால் அதிருப்திப்பட்டு விலகி இருந்தவர்கள்) வடக்கு கிழக்கு நிர்வாகத்தின் தலைவர் செயலாளர் ஆகியோரைச் சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தனர்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்: விளக்கமளித்த சங்கம் | North East Disappeared Person Relation Association

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்: விளக்கமளித்த சங்கம் | North East Disappeared Person Relation Association

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...