1 4
இலங்கைசெய்திகள்

மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை

Share

மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை

அநுராதபுரம்(anuradhapura) கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நடத்த உத்தேசிக்கப்பட்ட கணித பாட முகாமை நடத்தாமல் போலியானஆவணங்களை சமர்ப்பித்து 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்திய அனுராதபுரம் பிராந்திய பெண் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில், அனுராதபுரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகரவினால் NCP/CS/ED/15/111/2/40 என்ற கடிதத்துடன் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை16.07.2024.அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரணதரத்தை கற்கும் மாணவர்களுக்கான கணிதபாடத்தின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் 28 பாடசாலைகளில் 30 நிலையங்களில் 17.10.2022 முதல் 26.10.2022 வரையிலான காலப்பகுதியில் கணித முகாம்களை நடாத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.

எனினும் திட்டமிட்டபடி குறித்த காலப்பகுதியில் 14 பாடசாலைகளில் மாத்திரம் இந்த கணித முகாம்கள் நடத்தப்பட்டநிலையில் மேலதிகமாக 14 பாடசாலைகளில் கணித முகாம்கள் நடத்தப்பட்டதாக போலி ஆவணங்களை உருவாக்கி முறைகேடு செய்தமை பாரிய தவறு என வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பிரதம செயலாளர் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணித முகாமை நடத்துவதற்கு தேவையான பணித்தாள்களை அச்சடித்ததாக போலி பில்களை சமர்ப்பித்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த கணித முகாம்களை நடத்துவதற்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...