இலங்கைசெய்திகள்

கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு

rtjy 208 scaled
Share

கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு

எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கில் பூரண கடையடைப்பு செய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு – கிழக்கு கடையடைப்பு போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா தனது நீதித்துறை கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை எதிர்த்து அனைவரையும் ஒன்று திரள வேண்டும்.

அத்துடன், இந்தக் கடையடைப்பு நடவடிக்கை மூலம் தமிழ் நீதிபதி ஒருவருக்கு நிகழ்ந்த இந்த மிக மோசமான செயற்பாட்டை திரும்பத் திரும்ப உலகுக்கு எடுத்தக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே. இது சம்பந்தமாக அனைவரினது ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கின்றோம் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...