12 31
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தில் புதிய முதலீடுகள் கிடைக்கவில்லை! பாட்டலி சம்பிக்க ரணவக்க

Share

ஜனாதிபதியின் சீன விஜயத்தில் புதிய முதலீடுகள் கிடைக்கவில்லை! பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீனா விஜயத்தின் போது புதிய முதலீடுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சீனாவிற்கு சென்று புதிய திட்டங்கள் தொடர்பில் எவ்வித உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அநேகமான திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டவை எனவும் புதிய முதலீடுகள் என நாட்டுக்குள் எதுவும் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு குறித்து நீண்ட காலமாக சீனாவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக் காலத்திலும் எந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பில் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக் காலத்திலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் சீனாவுடன் பேசப்பட்டதாகவும் அமைச்சரவையில் இந்த யோசனைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையை முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அமைச்சரவைக்கு முன்மொழிந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சீனா விஜயத்தில், புதிய விடயங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை ஹொங்கொங் போன்று தனது மாநிலமாக மாற்றிக்கொள்ள சீனா முயற்சிப்பதாக அன்று கூறிய தலைவர்கள், இன்று சீனாவிற்கு விஜயம் செய்து முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறுவது கவலைக்குரிய விடயம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...