12 31
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தில் புதிய முதலீடுகள் கிடைக்கவில்லை! பாட்டலி சம்பிக்க ரணவக்க

Share

ஜனாதிபதியின் சீன விஜயத்தில் புதிய முதலீடுகள் கிடைக்கவில்லை! பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீனா விஜயத்தின் போது புதிய முதலீடுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சீனாவிற்கு சென்று புதிய திட்டங்கள் தொடர்பில் எவ்வித உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அநேகமான திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டவை எனவும் புதிய முதலீடுகள் என நாட்டுக்குள் எதுவும் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு குறித்து நீண்ட காலமாக சீனாவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக் காலத்திலும் எந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பில் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக் காலத்திலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் சீனாவுடன் பேசப்பட்டதாகவும் அமைச்சரவையில் இந்த யோசனைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையை முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அமைச்சரவைக்கு முன்மொழிந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சீனா விஜயத்தில், புதிய விடயங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை ஹொங்கொங் போன்று தனது மாநிலமாக மாற்றிக்கொள்ள சீனா முயற்சிப்பதாக அன்று கூறிய தலைவர்கள், இன்று சீனாவிற்கு விஜயம் செய்து முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறுவது கவலைக்குரிய விடயம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...