அரசியல்இலங்கைசெய்திகள்

யாழ்.ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் இல்லை !!!

Share
275053470 619463589551506 7713850466088779799 n
Share

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாகவே இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதி ஒருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம் பெற்றுள்ளது என்பதையும் அது தொடர்பான கடிதம் நமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறோம்

எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய நியமனம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.

அத்தோடு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை.

ஒருசில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளை ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பது அவர்களின் ஊடகத்துக்கு விரோதமான செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கெதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதற்கமைய பிரதமர் அலுவலக பிரதிநிதியாக காசிலிங்கம் கீதநாத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்ருந்தன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...