11 18
இலங்கைசெய்திகள்

13ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட அவசியமில்லை! அநுர அரசு

Share

13ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட அவசியமில்லை! அநுர அரசு

இலங்கையின் அரசியமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை இருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் குறித்து தெளிவூட்டும் வகையில் அரச தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(20) இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” அரசியமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. அதனடிப்படையில் அடுத்த வருட முற்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்கள் அல்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பில் நாடாளுமன்ற அனுமதி பெறப்பட வேண்டும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

மேலும், மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும். எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

அது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மீள்திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவுடனான கூட்டு அறிக்கையில் தகவல் வெளியிடப்படவில்லை.

ஏனென்றால் அவ்வாறு கலந்துரையாடுவதற்கான தேவை கிடையாது. அரசு என்ற வகையில் அரசமைப்பின் பிரகாரம் நாம் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...